search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய் அஸ்தி"

    பழனிக்கு வந்த வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

    பழனி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய அஸ்தி பல்வேறு புண்ணிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக பழனிக்கு வாஜ்பாய் அஸ்தி இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாஜ்பாய் படத்துக்கு முன்பாக அஸ்தி வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய பிறகு பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, செம்பட்டி, திண்டுக்கல் மற்றும் தேனி வழியாக கொண்டு செல்லப்பட்டு நாளை மதுரை வைகை ஆற்றில் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

    புதுவை முழுவதும் 2 நாட்களாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்ட அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வாஜ்பாய் அஸ்தி புதுவை கடலில் கரைக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி டெல்லியில் மரணமடைந்தார்.

    டெல்லி யமுனை ஆற்றங்கரையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித ஆறுகள், கடலில் கரைக்கப்படுகிறது.

    இதற்காக நாடு முழுவதும் அவரின் அஸ்தியை பா.ஜனதாவினர் கொண்டுசென்றுள்ளனர். புதுவைக்கு நேற்று முன் தினம் வாஜ்பாய் அஸ்தி வந்தது.

    புதுவை முழுவதும் 2 நாட்களாக சுற்றிவந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்ட அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று எல்லை பிள்ளை சாவடியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் 9 மணிவரை அஸ்திக்கு கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அஸ்தி ஊர்வலமாக கடற்கரை சாலைக்கு எடுத்து வரப்பட்டது. காந்தி திடலில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். பா.ஜனதா தலைவர் சாமிநாதன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், இளைஞரணி மவுலிதேவன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வேத பாராயணம் இசைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்.கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.க்கள் கண்ணன், ராமதாஸ், முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜவேலு, பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்திசேகர், கிருஷ்ணமூர்த்தி, நாரா.கலைநாதன்,

    அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், தி.மு.க. அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சஞ்சீவி, இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார், வி.எச்.பி. ஞானகுரு, வர்த்தக சபை செண்பகராஜன், குணசேகரன், வணிகர் கூட்டமைப்பு சிவசங்கரன், பாலு ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து வாஜ்பாய் அஸ்தி புதுவை கடலில் கரைக்கப்பட்டது.


    வாஜ்பாய் அஸ்தி அலங்கரிக்கப்பட்ட ரதம் மூலம் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டது.
    புதுச்சேரி:

    முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த 16-ந் தேதி மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் டெல்லி யமுனை ஆற்றங்கரையில் கடந்த 17-ந் தேதி தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது அஸ்தி ஹரித்துவார் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

    பின்னர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித நதி மற்றும் கடலில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து கலசங்கள் மூலம் அஸ்தி கொண்டு வரப்பட்டு நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதன்படி புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், காரைக்காலை சேர்ந்த செயலாளர் அருள்முருகன் ஆகியோர் டெல்லி சென்று வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை பெற்று விமானம் மூலம் புதுவை வந்தனர். ஒரு அஸ்தி கலசத்தை செயலாளர் அருள்முருகன் காரைக்கால் கொண்டு சென்றார்.

    புதுவை விமான நிலையத்தில் அஸ்தி கலசத்துக்கு சங்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம் மற்றும் செல்வம், பொதுச் செயலாளர் தங்க.விக்ரமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சோம சுந்தரம், முன்னாள் தலைவர் தாமோதர், இளைஞர் அணி மவுலித்தேவன் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி பெற்று கொண்டனர்.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதம் மூலம் அஸ்தி புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டது.

    முதல் கட்டமாக உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டை, உழவர் சந்தை, சிவாஜி சிலை, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, இந்திராநகர், ஜிப்மர் நுழைவு வாயில், ஊசுடு குரும்பாபேட், உழவர்கரை, மூலகுளம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை கதிர்காமம் தொகுதி இந்திரா காந்தி சிலை, அரியாங்குப்பம் கடை வீதி, தவளக்குப்பம் சந்திப்பு, பாகூர் கோவில் திடல், ஏம்பலம் தொகுதி சேலியமேடு, கடை வீதி, நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்ட ரதம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லித்தோப்பு லெனின் வீதி காமராஜர் சிலை அருகே தொடங்கி நகர பகுதி முழுவதும் சென்று மண்ணாடிப்பட்டு, வில்லியனூர் பகுதிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணி வரை பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்படுகிறது. அதன் பின்னர் 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக அங்கு கொண்டு செல்லப்படுகிறது.

    முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் கடற்கரை சாலை காந்தி சிலையை அடைகிறது. அங்கு கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாரா யணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்க் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், சமூக அமைப்பு நிர்வாகிகள் அஸ்திக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அதன் பிறகு பகல் 12 மணிக்கு தலைமை செயலகம் எதிரே கடலில் அஸ்தி கரைக்கப்படுகிறது.

    சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை 7 கலசங்களில் எடுத்து வந்தனர்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் 7 அஸ்தி கலசங்களுக்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கமலாலயம் வந்து, வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு  வரும் 26-ம் தேதி வாஜ்பாய் அஸ்தி கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கடற்கரை, ராமேஸ்வரம் கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், காவிரி, பவானி, வைகை என 6 இடங்களில் ஒரே சமயத்தில் கரைக்கப்பட உள்ளது. #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். #AtalBihariVajpayee #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை எடுத்து வந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாய் அஸ்தி கலசங்கள், தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக இரவு 7.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பாரத மாதா சிலைக்கு முன்பு வைக்கப்பட்ட 7 அஸ்தி கலசங்களுக்கும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இன்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

    கட்சி அலுவலகம் வந்த மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகு கனிமொழி எம்.பி. வந்து வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.



    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று முழுவதும் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேசுவரம், ஈரோடு, தஞ்சை ஆகிய 7 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #AtalBihariVajpayee #MKStalin
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய அஸ்தி தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #Vajpayee #BJP
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. இந்த அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க பா.ஜனதா முடிவு செய்தது. அதன்படி அஸ்தியின் ஒரு பகுதியை ஹரித்வார் கங்கை நதியில் வாஜ்பாய் குடும்பத்தினர் கரைத்தனர்.

    டெல்லியில் அவரது அஸ்தி கலசங்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மாநில தலைவர்களிடம் ஒப்படைத்தார். இதில் 7 கலசங்களை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் வாஜ்பாய் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாஜ்பாய் அஸ்தியை தமிழக தலைவர்கள் சென்னை எடுத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், இளைஞரணி செயலாளர் ஜி.கே.எஸ்., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர். ரதத்தின் முன்பும், பின்பும் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அணிவகுத்து வந்தனர்.

    வாஜ்பாய் அஸ்தி நேற்று இரவு 7.20 மணிக்கு கமலாலயம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாரதமாதா சிலையின் கீழே வைக்கப்பட்டது. வாஜ்பாய் அஸ்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், நடிகர் விஜயகுமார், துறைமுகம் பொறுப்புக்கழக உறுப்பினர் பிரகாஷ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.



    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “வாஜ்பாய் வழியில் இந்த தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த அஸ்தியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அஸ்தி கமலாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதில் கட்சி எல்லை, மொழி எல்லை, கொள்கை எல்லை ஆகியவற்றை கடந்து வந்து அஞ்சலி செலுத்தலாம்” என்றார்.

    மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்த அஸ்தி யாத்திரை செல்லும். எந்த மக்களுக்காக வாஜ்பாய் வாழ்ந்தாரோ, அதே மக்களின் தரிசனத்துக்காக அவரது அஸ்தி கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.

    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று (வியாழக்கிழமை) முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு (பவானி) ஆகிய 6 இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. 7 கலசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கூடுதலாக தஞ்சை காவிரி ஆற்றிலும் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை மறுதினம் புதுவை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி புனித நதிக்கரைகள், கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதேபோல் புதுவையிலும் கரைக்கப்பட உள்ளது.

    அஸ்தியை பெறுவதற்காக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பெங்களுரூ வழியாக டெல்லி செல்கிறார். அவர் புதுவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை மறுதினம் வாஜ்பாயின் அஸ்தி புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒரு நாள் வைக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சனிக்கிழமை முதல்- அமைச்சர், கவர்னர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு நடக்கிறது. தொடர்ந்து அவரது அஸ்தி கடலில் கரைக்கபட உள்ளது.

    ரபேல் விமான ஊழல் தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளது பொய்யான குற்றச்சாட்டு. ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் துறை அமைச்சர் ராஜினாமா செய்வார். உலகிலேயே 4 ஆண்டுகள் 1 ரூபாய் கூட ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதா நடத்தி வருகிறது.

    இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
    முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா’ அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இன்று ஹரித்துவார் நகரில் கங்கைல் ஆற்றில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு சென்று சேர்ந்தது.


    புரோகிதர்கள் மந்திரம் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீமூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தனர்.

    இந்த சடங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை கொண்டுவரப்பட்டு தமிழக மக்கள் அஞ்சலிக்கு பின்னர் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee
    சென்னை:

    முன்னாள் பிரதமரும் பா.ஜனதாவின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    தமிழகத்துக்கு அஸ்தி கலசத்தை எடுத்து வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அஸ்தி கலசம் நாளை (திங்கள்) சென்னை கொண்டுவரப்படுகிறது.

    இதுபற்றி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-


    தமிழகத்தின் மீது தனிப் பாசம் கொண்டிருந்த தன்னிகரற்ற தலைவர் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்கள் அஞ்சலிக்காக நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது.

    கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடல் உள்பட பல இடங்களில் அஸ்தியை கரைப்பது பற்றி தமிழக தலைமை முடிவு செய்யும் என்றார்.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

    அனைத்து மாநில பா.ஜனதா தலைவர்களும் டெல்லியில் வாஜ்பாய் அஸ்தியை பெற்று அந்த அந்த மாநிலங்களில் உள்ள நதிகள், கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நானும் முக்கிய நிர்வாகிகளும் இன்று டெல்லி சென்று அஸ்தியை பெற்றுக் கொள்வோம். அதை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க முடிவு செய்துள்ளோம்.

    சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், மதுரையில் வைகை ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு, கோவையில் பவானி ஆறு, கன்னியாகுமரி கடல் ஆகிய இடங்களில் கரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×